Tuesday, November 30, 2010

தக்காளி தொக்கு : அம்மா ஸ்டைல்- TOMATO THOKKU

தக்காளி  தொக்கு : அம்மா ஸ்டைல்

தேவையான பொருட்கள் :

 தக்காளி                       :  10  ( ஆப்பிள் தக்காளி நன்றாக பழுத்தது)
 நல்லெண்ணெய்      :  அரை  கப்
வெந்தயம்                   :  1 டீஸ்பூன்
வெல்லம்                    :  சிறிய துண்டு
மிளகாய் பொடி        : 3 - 4 tbsp  (ருசிக்கேற்ப  சேர்க்கவும்)
உப்பு, , கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் பொடி- சிறிதளவு


செய்முறை  :

தக்காளியை நன்றாக கழுவி துடைத்து மிக்சியில் நல்ல விழுதாக அரைத்து எடுக்கவும்.

 வாணலியில் வெந்தயம் போட்டு எண்ணெய் விடாமல் வெறுமே சிவக்க வறுக்கவும் (கருப்பாக  விட கூடாது. கசந்து விடும்) இதை பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் , பெருங்காயம் , கருவேப்பிலை சேர்க்கவும். அரைத்த தக்காளியை கொட்டவும். (கவனமாக கொட்டவும், மேலே தெளிக்கும் ) மஞ்சள் பொடி  போடவும். நன்றாக கொதிக்க விடவும்.  நன்றாக கொதி வந்து தக்காளியின் பச்சை வாசனை போனதும்,  ருசிக்கேற்ப உப்பு, சிறிய துண்டு வெல்லம், மிளகாய் பொடி  போடவும். அடுப்பை சிம் இல் வைத்து  இந்த கலவையை  நன்றாக கொதிக்க விடவும். கொதித்து கொதித்து நீர் வற்றி எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அவ்வப்போது கிளறி கிளறி விடவும். இது எண்ணையிலேயே வதங்க  வேண்டும். வேண்டுமானால் மேலும் 2  tbsp எண்ணெய் விட்டு கொள்ளலாம். உப்பு காரம் சரி பார்த்து கொள்ளவும்.

இறக்கும் பதம் :  வாணலியில் ஒட்டாமல் வரும். தொக்கு எண்ணையில் முடிச்சு முடிச்சாக தெரியும் அப்போது இறக்கலாம். இறக்கும் முன் வெந்தய பொடி தூவவும். தூவி இரண்டு கொதி  விட்டு இறக்கவும்.
நல்லெண்ணெய் இல்லாவிட்டால் மற்ற எண்ணெய் உபயோகிக்கலாம்,




 இந்த தக்காளி தொக்கு மிக சுவையானது. இட்லி தோசை சப்பாதிக்கு  தொட்டுகையகவும், சாதத்தில் கலந்தும்  சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு நல்ல ஜோடி .  எண்ணெய் மிதக்க இருப்பதால் 4 -5 நாட்கள் தாங்கும்.

TOMATO THOKKU - MOTHER'S STYLE

INGREDIENTS REQUIRED:

TOMATO                                             : 10 (APPLE TOMATO, RIPE)
GINGELLY OIL                                   : HALF CUP
FENUGREEK (VENDHAYAM)            : 1 TSP
JAGGERY       (VELLAM)                   :  SMALL PIECE
CHILLI POWDER                                : 3-4 tbsp  (Add to taste)
SALT, MUSTARD, ASAFOETIDA, CURRYLEAVES, TURMERIC -  SMALL QUANTITY

PROCEDURE:

. 
WASH AND CLEAN TOMATOES AND GRIND IN MIXIE INTO A FINE PASTE

DRY ROAST THE FENUGREEK (VENDHAYAM) . CAREFUL NOT TO BLACKEN. THEN POWDER THE SEEDS. KEEP ASIDE.

ADD THE OIL TO THE PAN AND HEAT.  ADD THE MUSTARD, AFTER IT SPLUTTERS, ADD THE CURRY LEAVES AND ASAFOETIDA .  NOW ADD THE TOMATO PASTE CAREFULLY. (IT MAY SPLASH. SO BE CAREFUL) ADD 1TSP TURMERIC.  LET THIS TO BOIL TILL THE RAW SMELL OF TOMATO IS OFF AND IT IS COOKED.

NOW ADD SALT TO TASTE, JAGGERY, CHILLI POWDER. KEEP THE STOVE IN SIM AND LET THIS COOK. THE WATER WILL SLOWLY EVAPORATE AND OIL SEEP OUT. CHECK IT FOR CORRECT TASTE. IF U WANT CAN ADD 1 TBSP OF OIL AGAIN IF NECESSARY.  KEEP STIRRING OFTEN.

ADD THE FENUGREEK POWDER AND LET IT COOK FOR ANOTHER 2 MTS.

IT IS READY, WHEN THE PASTE ROTATES, DOES NOT STICK ON THE PAN.  REMOVE FROM FLAME. READY TO SERVE.

THIS THOKKU IS VERY TASTY AND AS IT IS COVERED WITH OIL IT CAN BE GOOD FOR 4-5 DAYS.  IT GOES WELL WITH IDLI, DOSAI, CHAPPATHI.  CAN BE MIXED WITH RICE TO MAKE TOMATO RICE.  GOOD COMBINATION FOR CURD RICE.

IF U DONT LIKE GINGELLY OIL, CAN USE ANY OTHER OIL.

ENJOY!!.

Monday, November 29, 2010

கத்திரிக்காய் அடை குழம்பு - BRINJAL ADAI KUZHAMBU

கத்திரிக்காய் அடை குழம்பு : 

தேவையான பொருட்கள் : 
கத்தரிக்காய்             -    10  (சிறிய குட்டி சைஸ்)
புளி                             -  சிறிய எலுமிச்சை அளவு
கடலைப் பருப்பு      -  ஒரு கை அளவு
துவரம் பருப்பு         - ஒரு கை அளவு
வர மிளகாய்           - 6 அ 7
வெள்ளை எள்         - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம், கருவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு, உப்பு, எண்ணெய்  - சிறிது

கத்திரிக்காய் சின்ன சின்னதாக பாத்து வாங்கவும். நன்றாக கழுவி பாவாடை நீக்கவும்.  கத்தியால் மேல் பக்கம் ஒரு வெட்டு  போடவும். கீழ் பக்கத்தில் எதிர் திசையில் ஒரு வெட்டு போடவும். இது காயின் பாதி வரைதான் வரவேண்டும் . FULLA  வெட்டி விட கூடாது. முழு கத்தரிகாயகத்தான் போடவேண்டும்.

   
அடைக்க பொடி :  கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, எள், வரமிளகாய் எல்லாம் தனி தனியாக ஒரு சொட்டு எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும். சிறிது ஆறியதும் மிக்சியில் போட்டு  கரகரப்பாக இடிக்கவும்.
இந்த பொடியை எல்லா கத்திரிக்காயிலும்  அடைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து, இந்த பொடி அடைத்த கத்திரிகளை ஒவ்வொன்றாக போட்டு நிதானமாக பிரட்டவும். அதிகமாக பிரட்டினால், பொடி வெளி வந்து விடும். கத்திரி நிறம் மாறி சிறிது வெந்தவுடன் , புளியை கரைத்து கொட்டவும். எவ்வளவு குழம்பு வேண்டுமோ அவ்வளவு நீர் விடலாம். ஆனால் புளி அளவு பார்த்து கொள்ளவும். உப்பு போடவும். நன்றாக கொதித்து கத்திரி புளி இரண்டும் வெந்ததும் , மீதமுள்ள பொடியை தூவவும்.  பொடி தூவ தூவக்  குழம்பு கெட்டி ஆகி விடும். ரொம்ப கெட்டி ஆனால் நீர் விட்டு கொள்ளலாம்.  உப்பு சரி பார்த்து, சிறிது கொதித்ததும் இறக்கவும்.

பி. கு. : நல்லெண்ணெய் சிறந்தது.  காரம் போதவில்லையனால் கொதிக்கும்போது சிறிது மிளகாய் பொடி தூவி   விடலாம்.

  

BRINJAL ADAI KUZHAMBU:

INGREDIENTS :

BRINJAL                   : 10 (SMALL SIZE)
TAMARIND              : SMALL LEMON SIZE ( DISSOLVE IN 3 CUPS OF WATER)
KADALAI PARUPU :  A HAND FULL
THUVARAM PARUPU : A HAND FULL
DRIED CHILLI           : 6 -7
SESAME (WHITE)    : 1 TBSP
ASAFOTIDA, CURRYLEAVES, MUSTARD SEEDS, BENGALGRAM, SALT, OIL - AS REQUIRED

BRIINJAL SHOULD BE SMALL BABY SIZED. REMOVE THE "PAVADAI" STEM PORTION. MAKE A SLIT ON TOP AND A SLIT IN OPPOSITE DIRECTION IN THE BOTTOM. DONT CUT THE BRINJAL.

PODI :
ROAST KADALAI PARUPU, THUVARAMPARUPU, DRIED CHILLI, SESAME SEEDS, ASAFOETIDA( ONE PINCH) , CURRYLEAVES (1 TWIG)  , EACH SEPARATELY WITH ONE DROP OF OIL.  MAKE THIS INTO A COARSE POWDER.

NOW, FILL THE SLIT IN THE BRINJAL WITH THE POWDER AND SET ASIDE.

POUR 4 TBSP OF OIL IN A PAN AND HEAT. ADD MUSTARD SEEDS LET IT CRACK THEN ADD  BENGAL GRAM, ASAFOETIDA, CURRY LEAVES (1 TWIG) THEN ADD THE PREPARED BRINJALS ONE BY ONE, TOSS IT VERY SLIGHTLY COATING THE HOT OIL. BE CAREFUL THAT THE POWDER DOES NOT COME OUT OF THE BRINJAL TOTALLY.  ONCE THE BRINJAL CHANGES COLOR AND BECOMES SOFTER, ADD THE TAMARIND WATER. BRING TO BOIL ADD SALT TO TASTE. IN 3-4 MINTUES   THE BRINJALWILL BE COOKED AND THE RAW SMELL OF TAMARIND WILL BE GONE, ADD THE BALANCE POWDER. THE KUZHAMBU WILL GET THICKENED . IF IT BECOMES TOO THICK ADD LITTLE MORE WATER. AFTER 3 MINUTES OF BOILING REMOVE FROM FLAME.

BRINJAL ADAI KUZHAMBU IS READY.





-

Sunday, November 28, 2010

சுபயோக சுபதினத்தில் .... ...முதல் சமையல் குறிப்பு .

தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் அனைத்து அன்பர்களுக்கும் வணக்கம்.  ஒரு சுபயோக சுபதினத்தில் , நானும் ப்ளாக் எழுத வந்து விட்டேன். தளிகை என்றால் வைணவ பாஷையில் சமையல் என்று அர்த்தம்.  இன்று பல வைணவர் வீட்டிலேயே இந்த சொல்லை பயன்படுத்துவது இல்லை. இது போல ஒவ்வொரு community லேயும் உள்ள பல சுவாரஸ்யமான விஷயங்கள்,  பேச்சு வழக்குகள் உண்டு.  பலவற்றை இழந்துவிட்டோம்.
Anyway நான் இந்த ப்ளாக் எழுத வந்த கதை என்னவென்றால்.......... ஒண்ணுமே இல்லை. எல்லாரும் பண்றாங்களே நாமும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதையும் செய்துடுவோம்னு  நினைச்சேன்.
மஞ்சி வாண்டு யோசனை என்னன்னா தினப்படி வீட்ல பண்ற சமையல் தான் . தினம் ஒரு receipe போஸ்ட் பண்ண போறேன். எல்லாமே நான் ட்ரை பண்ணியது தான்.
சில டிவி ஷோல பார்த்தது சில நெட்ல புடிச்சது , பெரும்பாலும் எங்கம்மா பண்ணினது மாமியார் செய்தது இப்படி எல்லாம் கலந்து கட்டி வரும்.

முதல் சமையல் குறிப்பு :

ரொம்ப சிம்பிளா - வெந்நீர் போடுவது எப்படி :  ஒரு பாத்திரத்தில் வேண்டிய தண்ணீர் எடுத்து , அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை  வைத்து மூடி விடவும். கொதி வந்ததும் இறக்கவும்.  மூடி வைப்பதால் சீக்கிரம் கொதி வரும்.

ஹி.. ஹி... நாளை சந்திப்போம்